‘இந்தியா செய்திகள்’
குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்
டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்…
ஜெகனுக்கு ஒரு லட்சம் கோடி வந்தது எப்படி? : டில்லியில் பிரசாரம்: தெ.தேசம் தீவிரம்
புதுடில்லி: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி ,கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக, ஏழு பக்க அறிக்கை ஒன்றை தயார் செய்து, அதை பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கும் பணியை, தெலுங்குதேசம் கட்சி கடந்த திங்கள் கிழமை டில்லியில் துவங்கியது.
மேலும்…